Breaking

Friday, April 23, 2021

மின்வாரியத்தில் 2,900 கள உதவியாளர் தேர்வு ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் பரவலால், 2,900 கள உதவியாளர் பதவிக்கான உடல் தகுதி தேர்வை, தமிழக மின் வாரியம் ஒத்திவைத்துள்ளது. மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு:நேரடி நியமனம் வாயிலாக, 2,900 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2020 மார்ச்சில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2021 பிப்., 15 முதல், மார்ச் 16 வரை இணையதளம் வாயிலாக, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.அப்பதவிக்கான உடல் தகுதி தேர்வு, இம்மாதம் நடக்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 2500 காலிப்பணியிடங்கள்

தற்போது, கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், அரசின் நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாகவும், உடல் தகுதி தேர்வு நடக்கும் தேதி, ஒத்தி வைக்கப்படுகிறது.தேர்வு நாள், www.tangedco.gov.in என்ற இணையளத்திலும், விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரியிலும் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog