தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக் கூடாது - ஆசிரியர்கள் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 03, 2021

Comments:0

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக் கூடாது - ஆசிரியர்கள் கோரிக்கை

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களை கரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தற்போது வாரம் 6 நாட்கள் பணிபுரிகிறோம். இந்தசூழலில் தேர்தலுக்கான பயிற்சிவகுப்புகளை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்துவதுடன், விடுப்புஎடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ச் மாதம் முழுவதும் ஆசிரியர்கள் ஒய்வின்றி 31 நாட்கள் பணி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதேபோல, தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் கரோனா சோதனை செய்து கொள்வதுடன், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் ஏற்கெனவே இதர நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை குறித்த தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்படவில்லை. அதனால், தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பயிற்சி வகுப்புகளை வேலை நாட்களில் நடத்தவேண்டும். கரோனா தடுப்பூசி போடஅனைவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. குறைந்தபட்சம் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்காவது விலக்கு அளிக்க வேண்டும்.
அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா - மாணவர்கள் தீவிர கண்காணிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews