கல்லூரி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 14, 2021

Comments:0

கல்லூரி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு!

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி கல்லூரி கல்லூரி மாணவ - மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆவடி சட்டமன்ற தொகுதி சார்பில், வாக்காளர்கள் நேர்மையாகவும், 100 சதவீதம் வாக்களிக்க கோரியும் கல்லூரி மாணவர்கள் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி பட்டாபிராமில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆவடி தொகுதி தேர்தல் அதிகாரி பரமேஸ்வரி தலைமை தாங்கினார். 250க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
G.O. 2D. NO. 24 Dt: February 26, 2021 - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சட்ட்மன்ற விதி 110 – இன் கீழான அறிவிப்பு 10 ஆண்டுகளுக்கு மேலன 80 ஆதி திராவிடர் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் - ரூ.14,73,80,605-க்கு நிர்வாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பணம் வாங்காமல் நேர்மையாகவும், 100 சதவீதம் வாக்களிக்கவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன், ஆவடி தாலுகா வட்டாட்சியர்கள் செல்வம், மணிகண்டன், ரேவதி, துணை வட்டாட்சியர்கள் நடராஜன், குமார், வருவாய் அலுவலர் சோனியா, கல்லூரி முதல்வர் கல்விக்கரசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews