அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது தமிழக அரசின் நிர்வாகக் கோளாறு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 25, 2021

Comments:0

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது தமிழக அரசின் நிர்வாகக் கோளாறு!

"அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது தமிழக அரசின் நிர்வாகக் கோளாறு" என கார்த்தி சிதம்பரம் எம்.பி குற்றம்சாட்டினார். சிவகங்கை அருகே ஒக்கூரில் காங்கிரஸ் சார்பில் மாட்டு வண்டியில் மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சியை கார்த்தி சிதம்பரம் எம்.பி., இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 25.02.2021 - PDF பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-யை தொட்டுவிட்டது. அதில், பிரதமர் மோடி செஞ்சுரி அடித்ததால் குஜராத் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அவர் பெயர் வைக்கின்றனர். இது தான் தற்போதைய மத்திய அரசின் நிலையாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை கூடி இருந்தபோது கூட பெட்ரோல் விலை குறைவாக தான் இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் வரி மேல் வரி விதித்ததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தொடக்கக் கல்வி - 2021-2022ஆம் கல்வியாண்டு - வட்டாரக் கல்வி அலுவலர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை - இடைக்கால தடை ஆணை வழங்கப்பட்டமை - மறு உத்தரவு வரும் வரை பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைத்தல் - சார்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 25.02.2021
இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம். பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததால், அரசுக்கு வருவாய் இல்லாமல் விலையை உயர்த்துகின்றனர். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்தியது தமிழக அரசின் நிர்வாகக் கோளாறு. ஓய்வு பெற்றால் பென்ஷன் கொடுக்க வேண்டும். நிர்வாக சீர்கேட்டால் அரசிடம் பணம் இல்லை. அதனால் ஓய்வு வயதை உயர்த்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews