Breaking

Sunday, February 21, 2021

பிப்.,28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வரும் 28ம் தேதி நடக்க உள்ள மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கான அனைத்து துறைகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் அனைவரும் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

11,741 காவலர் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். முன்னேற்பாடு பணிகள்:
முகாம் நடப்பதற்கான முன்னேற்பாடுகள் சார்ந்த கூட்டம் கடந்த வியாழக்கிழமை அன்று நாமக்கல்லில் நடந்தது.

தேர்தல் எதிரொலி 10ம் வகுப்பு தேர்வு ரத்தாகிறதா?

அதில், வேலைவாய்ப்பு பிரிவின் கோவை மண்டல இணை இயக்குனர் ஆ.லதா அவர்கள் முகாம் நடப்பதற்கு முன்பாக பல்வேறு துறைகள் சார்பாக நடக்க வேண்டிய பணிகள் குறித்தும், முகாம் நடக்கும் போது செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், முகாம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். கோட்டத்தில் அனைத்து முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog