தேர்வு விபரம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 11, 2021

Comments:0

தேர்வு விபரம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்காக, மாணவர் விபரங்களை தாமதமின்றி பதிவு செய்ய வேண்டுமென, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன.

NMMS 2021 தேர்வு கூட நுழைவுச்சீட்டு - தேர்வுகள் துறை இயக்குநரின் உத்தரவு - PDF

அரசு பள்ளிகளில் கல்வி, 'டிவி' வழியே பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, பள்ளிகள் வழியாக அரசு தேர்வு துறை சேகரித்துள்ளது.அதேபோல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் விபரங்களை, பிப்., 1 முதல் இன்றைக்குள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு, அரசு தேர்வு துறை அறிவுறுத்தியது. ஆனால், பெரும்பாலான பள்ளிகள், இந்த பணிகளை இன்னும் துவங்கவே இல்லை. அதனால், பிளஸ் 1 பொது தேர்வு பணிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பத்தாம் வகுப்பு மற்றும்பிளஸ் 1 மாணவர்களின் விபரங்களை, பதிவு செய்வதற்கு கடைசி நாள் நெருங்கிய பிறகும், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர் விபரங்கள் பதிவு செய்யவில்லை. எனவே, தாமதமின்றி ஓரிரு நாளில் அரசு தேர்வு துறைக்கு தேவையான விபரங்களை, கட்டாயம் பதிவு செய்து, தகவல் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews