Breaking

Wednesday, February 24, 2021

ஆறு முதல் 10ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம்

தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' என்ற, கணினி அறிவியல் பாடம் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு பெற பழைய தகுதியையே தொடரக்கோரிய வழக்கு!
இது தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு: ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கணினி அறிவியல் பாடம் நடத்தப்படும்.மேலும், 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 520.13 கோடி ரூபாய் செலவில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்கல்வி உயர் கல்வி பயில, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்வி கட்டண சலுகை, ஒவ்வொரு ஆண்டும், இரண்டு லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு பெற பழைய தகுதியையே தொடரக்கோரிய வழக்கு!
இதற்காக, 2020- - 21ம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில், 391.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.வரும், 2021- - 22ம் கல்வியாண்டு இடைக்கால பட்ஜெட்டில், உயர் கல்விக்காக, 5,478.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog