ஆன்லைனில் தவறாக ‘கிளிக்’ செய்ததால் ஐஐடி.யில் சீட் இழந்த மாணவனுக்கு மீண்டும் இடம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 11, 2020

Comments:0

ஆன்லைனில் தவறாக ‘கிளிக்’ செய்ததால் ஐஐடி.யில் சீட் இழந்த மாணவனுக்கு மீண்டும் இடம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆக்ராவை சேர்ந்த மாணவர் சித்தாந்த் பாத்ரா(18). தந்தையை இழந்த சித்தாந்த்தை தாயார் வளர்த்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தாயாரும் இறந்துவிட்டதால் சித்தாந்த் அநாதையானார். தாத்தா, பாட்டி மற்றும் தாய் மாமனாருடன் வாழ்ந்து வரும் சித்தாந்த் மும்பை ஐ.ஐ..டி.யில் சேருவதற்காக ஜே.இ.இ. தேர்வு எழுதினார். இந்த தேர்வில் நாட்டிலேயே 270வது இடத்துக்கு வந்தார். மேலும் மும்பை ஐ.ஐ.டி.யில் எலெக்டிரிக்கல் இன்ஜினியரிங் கற்பதற்கு இடம் கிடைத்தது. இந்த நிலையில் ஐஐடி இணைய தளத்தை பார்வையிட்ட சித்தார்ந்த் அதில் ஐ.ஐ.டி.யில் இடம் கிடைக்க மேற்கொண்டு நடவடிக்கைகள் தேவையில்லை என்றும் வாபஸ் என்றும் குறிப்பிடப்பட்டிருந்த பகுதியை கிளிக் செய்தார். ஐ.ஐ.டி.யில் சேர மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கத்தேவையில்லை என்று தவறாக புரிந்து கொண்டு சித்தாந்த் அந்த இடத்தில் கிளிக் செய்துள்ளார். இதனால் ஐ.ஐ.டி.யில் அவருக்கு கிடைத்த இடம் ரத்து செய்யப்பட்டது. தவறாக கிளிக் செய்ததால் கிடைத்த இடமும் போய்விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சித்தாந்த் ஐ.ஐ.டி.யை தொடர்பு கொண்ட போது, அவருக்கு ஒதுக்கப்பட்ட இடம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சித்தாந்த் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, இடம் ரத்து செய்யப்பட்ட பின்னர் அந்த மாணவரை மீண்டும் சேர்க்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்று ஐ.ஐ.டி.தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தனக்கு கிடைத்த இடத்தை சித்தாந்த் வாபஸ் பெற்றுவிட்டதால் அந்த இடம் வேறு ஒரு மாணவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அத்துடன் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டது என்றும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. சித்தாந்த் அடுத்த ஆண்டு முயற்சி செய்யலாம் என்றும் கூறப்பட்டது. இதனால் சித்தாந்தின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இதனை தொடர்ந்து சித்தாந்த் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். அதில், நடப்பு கல்வியாண்டில் மாணவர் சித்தாந்த்தை அவர் விரும்பிய படிப்பில் சேர்க்கவும், வகுப்புகளில் பங்கேற்கவும் மும்பை ஐஐடி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் தெரிவித்துள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews