துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவாக, எதிர்ப்பாக போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 21, 2020

Comments:0

துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவாக, எதிர்ப்பாக போராட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும், அண்ணா பல்கலை முன், போராட்டம் நடந்தது. அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா, இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, பணியாற்றி வருகிறார். இவரது நிர்வாகத்தில், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிரான புகார்கள் அடிப்படையில், தமிழக அரசின் சார்பில் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.அதன் உண்மை தன்மை குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை நடத்த, உயர்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. அதேநேரத்தில், துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணைக்கு, அண்ணா பல்கலையின் பேராசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அதேபோல, மாணவர்கள் தரப்பிலும் சுரப்பாவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது.அரசின் விசாரணையை ரத்து செய்யக்கோரி, பல்கலையின் வாயிலில் மாணவர்களும், பேராசிரி யர்களும் போராட்டம் நடத்தினர். அதேநேரம், துணைவேந்தர் சுரப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், காந்திமண்டபம் அருகே போராட்டம் நடந்தது.2 போராட்டங்களுக்கும் அனுமதி அளிக்காத நிலையில், அசம்பாவித சம்பவம் நடக்காமல், போலீசார் பாதுகாப்பு அளித்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews