மருத்துவ படிப்புகளுக்கு பொது பிரிவு கவுன்சிலிங்; 30 பேர் ‛ஆப்சென்ட்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، نوفمبر 24، 2020

Comments:0

மருத்துவ படிப்புகளுக்கு பொது பிரிவு கவுன்சிலிங்; 30 பேர் ‛ஆப்சென்ட்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ படிப்புகளுக்கு பொது பிரிவு கவுன்சிலிங் இன்று (நவ.,22) முதல் நடைபெறுகிறது. இதில் தரவரிசைப்பட்டியலில் முதல் 50 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளில் 30 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு ஒதுக்கீட்டில், 4,179 எம்.பி.பி.எஸ்., 1,230 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில், 953 எம்.பி.பி.எஸ்., 695 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை இன்று (நவ.,23) முதல், டிச., 4 வரை நடைபெற உள்ளது. இன்று, பொது பிரிவில் முதல், 361 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், எம்.பி.பி.எஸ் தரவரிசைப்பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. அதேபோல், தரவரிசைப்பட்டியலில் முதல் 50 இடங்களை பிடித்தவர்களில் 30 பேர் வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة