சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ முதுநிலை படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: ஐகோர்ட் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 10, 2020

Comments:0

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ முதுநிலை படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: ஐகோர்ட் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுநிலை படிப்பு, டிப்ளமோ படிப்புகளில் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் உயர் சிறப்பு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் (சூப்பர் ஸ்பெசாலிட்டி) 50 சதவீத இடங்களை அரசுப்பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்கு நிலை குறித்து அரசியம் கேட்டு தெரிவிக்கப்படும் என்றார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இடம் ஒதுக்குவதில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. எனவே, இந்த படிப்புகளுக்கு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாதென்று தெரவித்தார்.மத்திய அரசு வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் வக்கீல் பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்புமில்லை என்று வாதிட்டார்.தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு கடந்த 7ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து, மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி தமிழக அரசின் நிலைப்பாட்டை பதிவு செய்து, தமிழக அரசு உச்ச நீதிமன்ற முடிவின்படி 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews