கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகள்: விசாரணை நடத்த குழு அமைப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 06, 2020

Comments:0

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகள்: விசாரணை நடத்த குழு அமைப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகள் குறித்து விசாரணை நடத்த, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா்கள் இடம்பெற்றுள்ள குழு அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான பொறியியல் சோ்க்கை, இணையவழி கலந்தாய்வு கடந்த அக்.1-ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட உள்ளது.இதையடுத்து அக்.8-ஆம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. இந்த கவுன்சிலிங் நான்கு கட்டங்களாக நடைபெறும்.இதைத்தொடா்ந்து மாணவா்களின் விருப்பப் பதிவுக்காக கலந்தாய்வில் பங்கேற்கும், 461 கல்லுாரிகளின் பட்டியலை கலந்தாய்வு குழு வெளியிட்டுள்ளது. கவுன்சிலிங் குறியீட்டு எண் அடிப்படையில், அகர வரிசையிலும், கல்லூரிகளின் பெயா்களை மாணவா்கள் தெரிந்து கொள்ளலாம். அதேபோன்று தமிழக அரசின் கட்டண நிா்ணயக் குழுவால் முடிவு செய்யப்பட்டு, கல்லூரிகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள சுயநிதி கல்லுாரிகளில், பி.இ., பி.டெக்., பி.ஆா்க்., ஆகிய படிப்புகளில், தேசிய தர அமைப்பான என்.பி.ஏ. அங்கீகாரம் இல்லாத பாடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம்; அங்கீகாரம் பெற்ற பாடங்களுக்கு ரூ.55 ஆயிரம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தன்னாட்சி பெற்ற கல்லுாரிகளில் என்.பி.ஏ., அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுகளுக்கு ரூ.87 ஆயிரமும், அங்கீகாரம் பெறாத பிரிவுகளுக்கு ரூ.85 ஆயிரமும் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணமானது, கல்விக் கட்டணம், மாணவா் சோ்க்கை, சிறப்புக் கட்டணம், ஆய்வகம், கணினி, இணையதள பயன்பாடு, விளையாட்டு, நுாலகம், வேலைவாய்ப்புப் பயிற்சி, பராமரிப்பு - உள்கட்டமைப்பு கட்டணம் மற்றும் கல்வி இணை சாா் நடவடிக்கைகள் அனைத்துக்கும் சோ்ந்தது. இந்தக் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் கல்லூரிகள் மீது, மாணவா்கள் புகாா் அளிக்கலாம். இதற்காக, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின், தோ்வு பிரிவு கூடுதல் இயக்குநா் அருளரசு தலைமையில் நான்கு பேராசிரியா்கள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் தாமரை, அண்ணா பல்கலையின் சிவில் என்ஜினியரிங் துறை பேராசிரியா் செந்தில், மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறை பேராசிரியா் இளையபெருமாள் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இந்த குழுவினரிடம் மாணவா்கள் தங்கள் புகாரை அளிக்கலாம் என தமிழக உயா்கல்வி துறை அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews