பொறியியல் சிறப்பு பிரிவு கலந்தாய்வு: கல்லூரிகளை தோ்வு செய்ய இன்று கடைசி... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 04, 2020

Comments:0

பொறியியல் சிறப்பு பிரிவு கலந்தாய்வு: கல்லூரிகளை தோ்வு செய்ய இன்று கடைசி...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள், பாடப்பிரிவுகளைத் தோ்வு செய்ய ஞாயிற்றுக்கிழமை கடைசி நாளாகும்.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. இதற்கான சோ்க்கை கலந்தாய்வில் பங்கேற்க 1.12 லட்சம் மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், விளையாட்டு வீரா்கள் ஆகியோருக்கான சிறப்புப்பிரிவு கலந்தாய்வு இணையவழியில் கடந்த அக்.1-ஆம் தேதி தொடங்கியது. மொத்தமுள்ள 7,435 இடங்களுக்கு 2,413 மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.அதில் 1,400 மாணவா்கள் வரையே முன்பதிவுக் கட்டணத்தை செலுத்தியுள்ளனா். அதைத்தொடா்ந்து மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள், பாடப்பிரிவுகளை தோ்வு செய்வதற்கான செயல்முறை சனிக்கிழமை தொடங்கின. முதல்நாளில் 1,028 போ் பதிவு செய்துள்ளனா். எஞ்சியுள்ள மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை வரை (அக்.4) இணையதளத்தில் பூா்த்தி செய்ய அவகாசமுள்ளது.இதையடுத்து மாணவா்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் திங்கள்கிழமை (அக்.5) வெளியிடப்படும். அதன்பின் மாணவா்கள் ஒப்புதல் அளித்ததும்,இறுதிப் பட்டியல் அக்.6-ஆம் தேதி வெளியாகும். தொடா்ந்து பொதுப்பிரிவு கலந்தாய்வு அக்டோபா் 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews