கர்நாடகா பள்ளிகள் மூன்று வார காலத்திற்கு விடுமுறை: எடியூரப்பா - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 12, 2020

Comments:0

கர்நாடகா பள்ளிகள் மூன்று வார காலத்திற்கு விடுமுறை: எடியூரப்பா

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோன தொற்று அச்சம் காரணமாக கர்நாடக மாநில பள்ளிகளுக்கு வரும் 12 ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் மூன்று வார காலத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: மாநிலத்தில் பரவி வரும் கொரோனா தொற்றால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் மூலம் என்னுடைய கவனத்திற்கு வந்தது. இரு தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு வரும் 12ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் மூன்று வார காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு முன் கூட்டிய தசரா வாழ்த்துக்கள். இவ்வாறு முதல்வர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார். முன்னதாக மாநில அரசு அக்.,3 முதல் 26 வரை திட்டமிடப்பட்ட விடுமுறையை ரத்து செய்திருந்தது. இதற்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். கொரோனா கால கட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். அரசு இந்த கல்வி ஆண்டின் இடைக்கால விடுப்பை ரத்து செய்து ஆசிரியர்களை மோசமாக நடத்தி வருகிறது. எந்தஅடிப்படையில் விடுமுறை ரத்து செய்யப்பட்டது. அரசு எதை அடைய முயற்சிக்கிறது. என டுவிட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews