இன்ஜி., கவுன்சிலிங் 3ம் சுற்று முடிவு நிரம்பியது 43 ஆயிரம் இடங்கள் தான் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 25, 2020

Comments:0

இன்ஜி., கவுன்சிலிங் 3ம் சுற்று முடிவு நிரம்பியது 43 ஆயிரம் இடங்கள் தான்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் மூன்றாம் சுற்று முடிவில் 21 ஆயிரம் இடங்கள் உட்பட இதுவரை 43 ஆயிரம் பேர் மட்டுமே இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங் அக். 1ல் துவங்கியது.தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும் இந்த ஆன்லைன் கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு 461 கல்லுாரிகளில் 1.63 லட்சம் இடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்த இடங்களை தேர்வு செய்ய 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்து தகுதி பெற்றுள்ளனர்.மாற்று திறனாளிகள் விளையாட்டு பிரிவினர் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு முதலில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் 497 பேர் இடங்களை தேர்வு செய்தனர். தொழிற்கல்வி பிரிவில் 946 பேர் இட ஒதுக்கீடு பெற்றனர்.பொதுப்பிரிவு மாணவர்களுக்கு அக். 8ல் கவுன்சிலிங் துவங்கியது. முதல் சுற்றில் 7510 பேர்; இரண்டாம் சுற்றில் 13 ஆயிரத்து 415 பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றனர். மூன்றாம் சுற்று நேற்று முடிந்தது. இதில் 20 ஆயிரத்து 999 பேர் இடங்களை தேர்வு செய்தனர். மொத்தமுள்ள நான்கு சுற்று கவுன்சிலிங்கில் இதுவரை நடந்துள்ள மூன்று சுற்றுகள் மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகளில் 72 ஆயிரம் பேர் பங்கேற்றனர்; ௪3 ஆயிரம் இடங்களே நிரம்பி உள்ளன. நான்காம் சுற்று கவுன்சிலிங்கிற்கு 1.20 லட்சம் இடங்கள் உள்ளன. ஆனால் 40 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்க மீதம் உள்ளனர். தற்போதைய நிலையிலேயே 80 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews