தமிழகத்தில் வேலையற்ற 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி: அமெரிக்க நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 21, 2020

Comments:0

தமிழகத்தில் வேலையற்ற 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி: அமெரிக்க நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில், 50 ஆயிரம் வேலையற்ற நபர்களுக்கு, இணைய வழியில், இலவசமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் வகையில், முதல்வர் முன்னிலையில், அமெரிக்க நிறுவனத்துடன், ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், தற்போது பயன்பாட்டில் உள்ள, http://www.tnskill.tn.gov.in என்ற இணையதளம், 2 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேம்பாடு
இந்த இணையதளத்தை, நேற்றுமுன்தினம், தலைமைச் செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்தார்.ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை உதவியுடன், தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டம் இரண்டாம் நிலையின் ஒரு பகுதியாக, 20 கோடி ரூபாய் மதிப்பில், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவில், உயர்தர திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்பட உள்ளது.இதற்காக, முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், தி ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்கா நாட்டின், கலிபோர்னியாவை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வரும், 'கோர்ஸெரா' நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த, முன்னணி இணையவழி கற்றல் தளம். கையெழுத்து
இந்நிறுவனம், பல்கலைகள், கல்லுாரிகள், கூகுள், ஐ.பி.எம்., போன்ற நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு பாடங்களில், சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. இணைய வழியில், பொறியியல், இயந்திர கற்றல், டிஜிட்டல் சந்தைப் படுத்தல், மருத்துவம் உள்ளிட்டவற்றில் இவை வழங்கப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள, 80 நாடுகளில் திறன்களை வளர்க்கும் நோக்கில், பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. தமிழகத்தில், 50 ஆயிரம் வேலையற்ற நபர்களுக்கு, இணைய வழியில், இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளிப்பதற்கு, முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும், கோர்ஸெரா நிறுவனத்திற்கும் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்திற்கு விருதுகள்
* டில்லியில், 2019 ஜூலையில், 55வது அகில இந்திய திறன் போட்டி நடந்தது. இதில், கைவினைஞர் பயிற்சியில், தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது. மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில், பாராட்டு சான்றிதழ் மற்றும் சுழற்கேடயம் வழங்கப்பட்டது. இதை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், முதல்வரிடம் காண்பித்து, வாழ்த்து பெற்றார் * அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், சிறப்பாக பயிற்றுவித்ததற்காக, அம்பத்துார் அரசு தொழிற் பயிற்சி நிலைய உதவி பயிற்சி அலுவலர் சுகுமாருக்கு, பொறியியல் அல்லாத பிரிவில், மாநில மற்றும் தேசிய அளவிலான, 'கவ்சலாச்சாரியா' விருது; மதுரை அரசு தொழிற் பயிற்சி நிலைய, உதவி பயிற்சி அலுவலர் செல்வேலுக்கு, பொறியியல் பிரிவில், மாநில அளவிலான, 'கவ்சலாச்சாரியா' விருதும், மத்திய அரசால் வழங்கப்பட்டது.இருவரும், முதல்வரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews