பொது நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 20, 2020

பொது நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2020-21-ஆம் கல்வியாண்டில் பொறியியல், பி.எஸ்சி., (விவசாயம், கால்நடை பட்டுவளர்ப்பு, காடுவளர்ப்பு, தோட்டக்கலை), பி.ஃபார்ம்., டி.ஃபார்ம். ஆகிய படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சேருவதற் காக மாணவர்களை தெரிவுசெய்வதற்கு கர்நாடக தேர்வு ஆணையம் கர்நாடக பொது நுழைவுத்தேர்வுகளை ஜூலை 30, 31 ஆகிய தேதிக ளில் கரோனா தீநுண்மி தொற்றுநோய் பரவலைக் கருத்தில் கொண்டு மிகுந்த பாதுகாப்புடன் நடத்தியது. இதற்காக மாநிலம் முழுவதும் 497 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் 1.8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள்: பொது நுழைவுத்தேர்வு முடிவுகள் ஆக. 20-ஆம் தேதி அறிவிக்கப்போவதாக துணை முதல்வர் அஸ்வத் நாராயணா அறிவித்திருந்தார். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தேர்வு முடிவுகள் ஆக. 21-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்று காலை 11 மணிக்கு துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் கே.சுதாகர் ஆகியோர் 2020-21- ஆம் கல்வியாண்டுக்கான தேர்வு முடிவுகளை அறிவிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, நண்பகல் 12.30 மணி அளவில் தேர்வு http://kea.kar.nic.in, http://cet.kar.nic.in, http:// karresults.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் கர்நாடக தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews