பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசுக்கு NCERT தனது வழிகாட்டுதல்களை சமர்பித்துள்ளது அதன் விவரம் .. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 12, 2020

Comments:0

பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசுக்கு NCERT தனது வழிகாட்டுதல்களை சமர்பித்துள்ளது அதன் விவரம் ..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசுக்கு NCERT தனது வழிகாட்டுதல்களை சமர்பித்திருக்கும் நிலையில் வரும் டிசம்பர் மாதம் வரை கல்வி நிறுவனங்களை திறக்க வாய்ப்பு இல்லை என மத்திய உயர்கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் உள்ள பள்ளிகள் மீண்டும் திறப்பு..வழிகாட்டுதல்கள் என்னென்ன ?
தொற்று நோயை தவிர்ப்பதுடன் பள்ளிகளை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த வழிகாட்டுதல்களை தயாரிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க NCERT தயாரித்து சமர்பித்துள்ளது.
இதுவரை 15 மாநிலங்கள் பள்ளிகளை திறக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு கட்டங்களாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது: - முதற்கட்டமாக 11 மற்றும் 12ஆம் வகுப்புகள்.
- ஒரு வாரம் கழித்து 9 மற்றும் 10ஆம் வகுப்புகள்
- இரண்டு வாரங்களுக்குப் பிறகு 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள்.
- அதன்பிறகு மூன்று வாரங்களுக்குப் பிறகு 3 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள்.
- நான்கு வாரங்களுக்கு பிறகு 1 மற்றும் 2ஆம் வகுப்புகள்.
- ஐந்து வாரங்களுக்குப் பிறகு, நர்சரி மற்றும் கே.ஜி வகுப்புகள்.
என திறக்க NCERT பரிந்துரைத்துள்ளது.
வழிகாட்டுதலின் முக்கிய அம்சங்கள்:
● ஒவ்வொரு குழந்தைக்கும் முகமூடி அணிவது அவசியம்.
● வகுப்பில் மாணவர்களுக்கு இடையில் ஆறு அடி தூரம் இருக்க வேண்டும்
● ஒரு வகுப்பறையில் 15 முதல் 25 குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள்.
● குழந்தைகள் தங்கள் இருக்கைகளை மாற்ற கூடாது, அவர்களின் பெயர்கள் மேசையில் எழுதப்பட வேண்டும் ● வீட்டுபாடங்கள் தினமும் வழங்கப்படும்.
● வகுப்பறை கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்து வைக்கப்படும், மேலும் ஏசி பயன்படுத்தப்படாது.
● பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சோதனை செய்ய வேண்டும்.
● பள்ளிக்கு வெளியே உணவகங்கள் இருக்க கூடாது.
மாணவர்கள் பேனா, பென்சில் அல்லது உணவை பரிமாற கூடாது. மேலும் சொந்தமாக தண்ணீர்க் கொண்டு வர வேண்டும். *
தினமும் வகுப்பு அறைகள் சுத்திகரிக்கப்படுவதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்யவேண்டும்.
காலை கூட்டங்கள் மற்றும் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெற கூடாது.
இவற்றை நடைமுறை படுத்த மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனையில் உள்ளது. இந்த மாத இறுதியில் வழிகாட்டுதல்களை வெளியிடும் என எதிர்பார்ப்பு 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews