இரு வாரத்துக்குள் புதிய கல்விக் கொள்கை அமலாகும்: கர்நாடக கல்வித்துறை அமைச்சர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 01, 2020

Comments:0

இரு வாரத்துக்குள் புதிய கல்விக் கொள்கை அமலாகும்: கர்நாடக கல்வித்துறை அமைச்சர் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கர்நாடகாவில் இரண்டு வார காலத்துக்குள் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று அம்மாநிலக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவரான கஸ்தூரிரங்கனுடன் காணொலிக் கருத்தரங்கில் சுரேஷ் குமார் உரையாடினார். இது தொடர்பாகப் பேசிய அமைச்சர் சுரேஷ் குமார், ''அனைவருக்கும் தரமான கல்வி மூலம் புதிய கல்விக் கொள்கை நிலையான, உயிர்ப்பான சமூகத்தை உருவாக்கும். இக்கொள்கையை அமல்படுத்துவதில் கர்நாடகா ஆவலாக உள்ளது. மாநில அரசின் சார்பிலும் கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளோம். இரண்டு வார காலத்துக்குள் இரண்டு கொள்கைகளும் இணைக்கப்பட்டு, கர்நாடகாவுக்கெனத் தனிக் கொள்கை உருவாக்கப்படும். இது ஆகஸ்ட் 20-ம் தேதியில் அமல்படுத்தப்படும். 5-ம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வி என்பது சிறப்பானதாகும். 34 ஆண்டுகளுக்குப் பிறகு வருங்காலத்தைத் தயார்படுத்துவதில் கல்விக் கொள்கை முழுமையான ஒன்றாக உள்ளது. இக்கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதில், கர்நாடகா முன்னணியில் திகழும்'' என்றார் அமைச்சர் சுரேஷ் குமார். புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29-ம் தேதி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews