20ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 04, 2020

Comments:0

20ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு - வரும் 20ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய போவதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, வரும் 20ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வங்கி பகுதி நேரம் மட்டுமே இயங்கி வரும் நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் முழுநேரமும் இயங்க வேண்டும் என்றும், 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வங்கி ஊழியர் கூட்டமைப்பு 20 ஆம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்றும் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் பொது போக்குவரத்து வசதி எதுவும் இல்லாத நேரத்தில் 100 சதவீத ஊழியர்கள் எப்படி பணிக்கு வரமுடியும் என்றும் தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews