தமிழ்நாடு அமைச்சு பணியில் தற்காலிக தட்டச்சர்களைமறு பணியமர்த்த உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 01, 2020

Comments:0

தமிழ்நாடு அமைச்சு பணியில் தற்காலிக தட்டச்சர்களைமறு பணியமர்த்த உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அமைச்சு பணியில், தட்டச்சர்களாக, சுருக்கெழுத்து தட்டச்சர்களாக, தற்காலிகமாக பணிபுரிவோரை, மீண்டும் பணியமர்த்த, அரசு உத்தரவிட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS தமிழ்நாடு அமைச்சு பணி மற்றும் நீதித்துறை அமைச்சு பணியில் காலியாக இருந்த, தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள் பணியிடங்கள், 2007ல் தற்காலிகமாக நிரப்பப்பட்டன.அவர்களுக்கு, ஓராண்டு பணி நிறைவடைந்ததும், ஒரு நாள் பணியிடை முறிவு வழங்கி, மீண்டும் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டனர். CLICK HERE TO READ OFFICIAL NEWS அவர்களை நிரந்தரமாக்க, தேர்வாணையம் சார்பில், 2009ல் சிறப்பு போட்டி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு பெற்றோர் நிரந்தரமாக்கப்பட்டனர். தேர்ச்சி பெற்றும், சில காரணங்களுக்காக, தொடர்ந்து தற்காலிக பணியில் இருப்போர், தேர்வில் தோல்வி அடைந்தோர், தேர்வு எழுதாதோர், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் எல்லாம், தொடர்ந்து தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர்.அவர்களுக்கான பணிக்காலம், ஜூலை, 4ல் நிறைவடைகிறது. CLICK HERE TO READ OFFICIAL NEWS எனவே, அவர்களுக்கு, நாளை ஒரு நாள் பணியிடை முறிவு வழங்கி, நாளை மறுதினம் முதல், மீண்டும் தற்காலிக அடிப்படையில், பணி அமர்த்தும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.இதை அமல்படுத்தும்படி, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் ஸ்வர்ணா, அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு, கடிதம் எழுதி உள்ளார். CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews