புது செயலி உருவாக்க ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 13, 2020

Comments:0

புது செயலி உருவாக்க ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி மாணவர்கள், புதுமையான செயலிகளை உருவாக்குவதற்கான புதிய திட்டத்தை, மத்திய அரசு, துவங்கியுள்ளது. சீனாவின், 'டிக் டாக்' உட்பட, 59 செயலிகளை, சமீபத்தில், மத்திய அரசு தடை செய்தது. இதையடுத்து, நம் நாட்டினர், புதுமையான செயலிகளை உருவாக்க, ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கானோர், இந்திய செயலிகளைப் பதிவிறக்கம் செய்யத் துவங்கியுள்ளனர். மத்திய அரசு அதிகாரிகள் சிலர் கூறியதாவது: 'தற்சார்பு இந்தியா' முன் முயற்சியின் ஒரு பகுதியாக, 'நிடி ஆயோக்' கின், அடல் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு செயலி மேம்பாட்டுப் பாடத் திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.
மொபைல் செயலி, 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தின் துணையுடன் துவங்கப்பட்ட இத்திட்டத்தில், அனைத்து மாணவர்களுக்கும், 'ஆன்லைன் கோர்ஸ்' இலவசமாக நடத்தப்படும். இவற்றில், மாணவர்கள், செயலிகளை உருவாக்கும் வகையில், ஆறு திட்டங்கள் இடம்பெறுகின்றன. இது தொடர்பாக, ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews