பத்தாம் வகுப்பு தேர்வு: ஆசிரியர் மாணவர்களுக்கு 46.30 லட்சம் மாஸ்க்: பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 04, 2020

Comments:0

பத்தாம் வகுப்பு தேர்வு: ஆசிரியர் மாணவர்களுக்கு 46.30 லட்சம் மாஸ்க்: பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்களுக்கான 43 லட்சம் மாஸ்க்குகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள மாணவர்களின் பொதுத்தேர்வை ஒத்திவைக்கும்படி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பான மனுவும் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகமுடிவுகள் வெளியான பிறகு, பெற்றோரை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பொதுத்தேர்வில் பங்கேற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, 46 லட்சம் மறுபயன்பாட்டு முக கவசங்கள் வழங்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இம்மாதம் நடக்கஉள்ள பொதுத்தேர்வின் போது, ஒவ்வொரு தேர்வறையிலும், 10மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சமூக இடைவெளி மற்றும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் 10ம் வகுப்பு தேர்வுக்கு, 12 ஆயிரத்து, 690 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.இவற்றில், 9.76 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவர் பிளஸ் 1 தேர்வுக்கான, 7,400 தேர்வு மையங்களில், 8.41 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2 தேர்வில், மார்ச், 24ல் தேர்வு எழுதாத, 36 ஆயிரம்பேர் பங்கேற்க உள்ளனர் இந்த தேர்வு பணிகளில், 2.21 லட்சம் ஆசிரியர்கள் மற்றும், 1.66 லட்சம் பணியாளர் கள் ஈடுபடுகின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என, அனைவருக்கும், 46.37 லட்சம் மறு பயன்பாட்டு, முக கவசங்கள் வழங்கப்படும் தேர்வு எழுத வரும் வெளி மாநில, மாவட்ட மாணவர்களுக்கு, தனிமைப்படுத்துதலில், விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.அவர்கள் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் மாணவர் விடுதிகள், வரும், 11 முதல் தேர்வு முடியும் வரை திறந்திருக்கும். இந்த தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு, 'இ - பாஸ்' பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது அனைத்து தேர்வு மையங்களிலும், கைகழுவும் சோப்பு மற்றும் சானிடைசர் வைக்கப்பட்டிருக்க வேண்டும் தேர்வு எழுதும் மாணவர்கள், பங்கேற்கும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், சமூக இடைவெளியையும், முக கவசம் அணிவதையும், கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார். 10ம் வகுப்பு பொது தேர்வுக்குஇன்று, 'ஹால் டிக்கெட்' வெளியீடுபத்தாம் வகுப்பு, பிளஸ், 1 மற்றும் பிளஸ்2 பொது தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியிடப்படுகிறது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன், 15 முதல், 25ம் தேதி வரை நடக்க உள்ளது.ஜூன், 16ல், பிளஸ் 1 தேர்வு; ஜூன், 18ல் பிளஸ் 2 தேர்வும் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியிடப்படுகிறது.தேர்வர்கள், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில்,இன்று பிற்பகல் முதல், ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம். ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள தொலைபேசி எண்ணில் பேசி, தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு, ஹால் டிக்கெட்டை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, பெற்றோர்களை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். அதே சமயம், மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பள்ளிப் பாடங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிலையில், மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பதிவிட்டுள்ளார். அதில், மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையிலான குழு முடிவு செய்து, மாணவர்களுக்கு என்னென்ன பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டுமோ, அந்த பாதுகாப்புகளை அளித்து, தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
ஜூன் 11ம் தேதியன்றே விடுதிகளை திறப்பதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பித்திருக்கிறார். அந்த ஆணையின் அடிப்படையில் விடுதியில் தங்கி படிக்கின்ற மாணவர்கள், அந்த விடுதியிலேயே தங்கிக்கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு தேவையான பேருந்து வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் தேர்வெழுதினால் போதும் என்ற முறையில், மாணவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் என்ன குறிப்பிடுகிறதோ, அதை கடைப்பிடித்து வருகிறோம். மாணவர்களுக்கான 43 லட்சம் மாஸ்க்குகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, என குறிப்பிட்டுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews