தனிமைப்படுத்தப்படும் பகுதியில் சி.ஏ., தேர்வர் சிக்கினால் என்ன செய்வது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 16, 2020

Comments:0

தனிமைப்படுத்தப்படும் பகுதியில் சி.ஏ., தேர்வர் சிக்கினால் என்ன செய்வது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கணக்கு தணிக்கையாளர் படிப்புக்கான, சி.ஏ., தேர்வு, திட்டமிட்டபடி, ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 'தொற்று பரவல் காரணமாக, இந்த தேர்வில் பங்கேற்க விரும்பாதவர்கள், நவம்பரில் நடக்கும் தேர்வில் பங்கேற்கலாம்' என்று, ஐ.சி.ஏ.ஐ., அமைப்பு தெரிவித்து உள்ளது. சந்தேகம் எனினும், தேர்வு நெருங்கும் நாட்களில், தேர்வு எழுதும் மாணவர், தனிமைப்படுத்தப்படும் பகுதியில் சிக்கினால், அவர் எப்படி தேர்வெழுத முடியும் என்ற சந்தேகத்திற்கு, இந்த அமைப்பிடமிருந்து பதில் இல்லை.'ஆடிட்டர்' என்ற கணக்கு தணிக்கையாளர் பதவிக்கான, சி.ஏ., தேர்வு, ஆண்டுதோறும், மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இந்த ஆண்டு, மே மாதம் நடக்கவிருந்த தேர்வு, கொரோனா பிரச்னையால் தள்ளி வைக்கப்பட்டது.இந்த தேர்வை, ஜூலை, 29 முதல் நடத்துவதற்கு, ஐ.சி.ஏ.ஐ., என்ற, இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து, ஐ.சி.ஏ.ஐ., கூடுதல் செயலர், கார்க் வெளியிட்ட அறிவிப்பு:கொரோனா பீதி காரணமாக, சி.ஏ., தேர்வை தள்ளி வைக்க, சில மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பெரும்பாலான மாணவர்கள், தேர்வில் பங்கேற்க விருப்பமாக உள்ளனர். எனவே, தற்போதைய நிலையில், ஏற்கனவே அறிவித்த தேதியில், சி.ஏ., தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்து, கொரோனா பிரச்னையால் பங்கேற்க முடியாத மாணவர்கள், ஜூலை தேர்வில் இருந்து, தங்களை விடுவித்து கொள்ளலாம்.அவர்கள், நவம்பரில் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். அவர்கள், ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், அந்த கட்டணம், நவம்பர் தேர்வுக்கு ஏற்கப்படும். அதேநேரம், நவம்பர் தேர்வுக்காக விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்களுக்கான தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கும், 'ஆன்லைன்' வசதி, நாளை காலை, 11:00 மணிக்கு துவங்கி, வரும், 20ம் தேதி இரவு, 12:00 மணிக்கு முடிகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.தேர்வு துவங்க இன்னும், ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுக்கும் வசதி, வரும், ௨௦ல் முடிவடைகிறது. ஜூலையில் தேர்வெழுத விரும்பும் மாணவர்கள், தேர்வு நெருங்கும் தேதிகளில் தனிமைப்படுத்தப்படும் பகுதியில் சிக்கினால், அவர் எப்படி தேர்வு எழுத வருவர் என்ற சந்தேகத்திற்கு, ஐ.சி.ஏ.ஐ., கூடுதல் செயலர் பதில் அளிக்கவில்லை. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews