10, 11ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் பெறும் பணி நிறைவு - விடைத்தாள் இல்லாத தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 29, 2020

Comments:0

10, 11ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் பெறும் பணி நிறைவு - விடைத்தாள் இல்லாத தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, பள்ளிகல்வித்துறை தயாரித்து கொடுக்கும் காலாண்டு, அரையாண்டு விடைத்தாளை வைத்து தேர்வு நடத்துவதில்லை. அதற்கு பதில் அவர்களே கேள்வித்தாள் தயாரித்து அடிக்கடி தேர்வு நடத்து வார்கள். * விடைத்தாள் இல்லாத தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பு நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்1 மாணவர்களின் விடைத்தாள்களை பெறும் பணி நிறைவடைந்துள்ளது. விடைத்தாள் இல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதே போல், பிளஸ்1 அரசு பொதுத்தேர்வில், நடத்த முடியாத பாடங்களான வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களுக்கும் ஆல்பாஸ் போடப்பட்டுள்ளது. மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்று, அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் மற்றும் பள்ளி வருகை பதிவேடு போன்றவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் 10, 11ம் வகுப்பு மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள், கடந்த 22ம் தேதி முதல் நாமக்கல், திருச்செங்கோடு என இரண்டு மையங்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் உதயகுமார், ரவி ஆகியோர் முன்னிலையில் பெறப்பட்டு வந்தன. அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்கள், தங்கள் பள்ளியில் உள்ள 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மாணவ, மாணவியரின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாளை ஒப்படைத்தனர். நேற்றுடன் விடைத்தாள் பெறும் பணிகள் முடிவடைந்தது. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை பொறுத்தவரை 60 சதவீத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், விடைத்தாளை ஒப்படைத்துள்ளனர். மற்ற பள்ளிகளில் விடைத்தாள் இல்லை. அதற்கு பதிலாக, தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் பிராக்ரஸ்கார்டு, மதிப்பெண் பதிவேடு அறிக்கை போன்றவற்றை ஒப்படைத்துள்ளனர். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை 85 சதவீத பள்ளிகளில் மாணவ, மாணவியரின் விடைத்தாள் இல்லை. அதற்கு பதில் அவர்கள், மதிப்பெண் பதிவேட்டை மட்டும் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து விடைத்தாள் ஒப்படைக்காத தலைமை ஆசிரியர்களிடம் முகாம் அலுவலர்கள் விளக்கம் கேட்டுள்ளனர். அந்த விளக்கத்தையும் உடனடியாக தலைமை ஆசிரியர்களிடம் எழுத்துபூர்வமாக கேட்டு வாங்கியுள்ளனர்.
தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, பள்ளிகல்வித்துறை தயாரித்து கொடுக்கும் காலாண்டு, அரையாண்டு விடைத்தாளை வைத்து தேர்வு நடத்துவதில்லை. அதற்கு பதில் அவர்களே கேள்வித்தாள் தயாரித்து அடிக்கடி தேர்வு நடத்துவார்கள். இதனால் அவர்களிடம் விடைத்தாள் இல்லை என்பதை, பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். அரசு பள்ளிகளை பொறுத்தவரை, சிறிய பள்ளிகளில் மட்டுமே விடைத்தாள் இருக்கிறது. ஒரு சில பெரிய பள்ளிகளில் விடைத்தாளை தலைமை ஆசிரியர்கள் எடைக்கு போட்டுள்ளனர். மற்ற பள்ளிகளில் விடைத்தாளை தேர்வு முடிந்து, விடைத்தாளை திருத்திய பிறகு மாணவ, மாணவியரிடமே கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. இதன் காரணமாக விடைத்தாளை ஒப்படைக்க முடியவில்லை. நாளை (29ம் தேதி) முதல், மாணவ, மாணவியரின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது. விடைத்தாள் இல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பள்ளிகல்வித்துறை இயக்குனரின் உத்தரவை பெற்று செயல்படுத்துவோம் என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews