பத்தாம் வகுப்புத் பொதுத்தேர்வுகள் ரத்து..: தமிழக அரசின் முடிவு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 09, 2020

Comments:0

பத்தாம் வகுப்புத் பொதுத்தேர்வுகள் ரத்து..: தமிழக அரசின் முடிவு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 10ம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு, தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு தேர்வுகளை ஒத்திவைக்க முடியாதா என நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருந்தது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இவ்விகாரம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு.. ரவிக்குமார் எம்.பி இதுகுறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் எம்.பி., தமிழக அரசின் இந்த முடிவை தாங்கள் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், நாளைய தினம் திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த ஆர்ப்பட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக இதனை கருதுகிறோம். தமிழக மற்றும் தெலுங்கானா அரசுகளின் முடிவை கண்டு, மத்திய அரசும் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். விஜயகாந்த் இவ்விகாரம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்திருப்பது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றது. காலங்கடந்த முடிவை முதலிலேயே எடுத்திருந்தால் தேமுதிக வரவேற்றிருக்கும், அரசின் முடிவால் மாணவர், பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரவித்துள்ளார். மேலும், திமுக தோழமைக் கட்சிகள் சார்பில் நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள அவர், முன்கூட்டியே இந்த முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின் பதற்றம், மன உளைச்சலை தவிர்த்திருக்கலாம் என கூறியுள்ளார். ஜி.கே.வாசன் இவ்விகாரம் குறித்து பேசிய த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், இந்த செய்தி மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே தமிழக அரசு தேர்வினை அறிவித்திருந்தது. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு போவதால் மாணவர்களுடைய கல்விக்கு மேல், அவர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பு முக்கியம் என்பதன் அடிப்படையிலேயே சரியான நேரத்தில், சரியான முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது, என கூறியுள்ளார். பாலகிருஷ்ணன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள், பெற்றோர்கள், மாணவர்கள், நீதிமன்றம் என அனைவரும் வற்புறுத்திய நிலையில், தமிழக அரசு இந்த முடிவை தற்போதாவது எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், இவ்வளவு அழுத்தம் கொடுத்த பிறகே அரசாங்கம் முடிவெடுக்க வேண்டிய அசியமில்லை. சூழ்நிலைகேற்ப அரசு முடிவு எடுக்க வேண்டும், என அவர் கூறியுள்ளார். கே.எஸ்.அழகிரி இவ்விகாரம் குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக அரசின் இந்த முடிவை தமிழக காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ஆனால், அரசாங்கம் இந்த முடிவை ஏற்கனவே எடுத்திருக்க வேண்டும். மக்களின் கருத்துகளுக்கு இனியாவது அரசு ஒத்துழைக்க வேண்டும், என கூறியுள்ளார். வைகோ ஜூன் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த 10ம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்துச் செய்யப்பட்டு, அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்வு பெற்றதாக, தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்து உள்ளார். தமிழக அரசின் இந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இதற்காக எச்சரிக்கை மணி அடித்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நன்றி செலுத்துவதாகவும் இது மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews