TNDTE: இன்ஜினியரிங் மாணவர்கள் வீட்டிலிருந்து படிப்பதற்கு ஏற்பாடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 14, 2020

Comments:0

TNDTE: இன்ஜினியரிங் மாணவர்கள் வீட்டிலிருந்து படிப்பதற்கு ஏற்பாடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
TN Engineering Online Class: TNDTE எனப்படும் தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநனரகம், இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே படிப்பதற்கு காணொலி விரிவுரைகள் தொகுப்பை வெளியிட்டுள்ளது. கரோனா ஊரடங்கில் பொறியியல், தொழில்நுட்ப மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே படிப்பைத் தொடரும் வகையில், காணொலி விரிவுரைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே படிப்பதற்கு, தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநனரகம், காணொலி விரிவுரைகள் தொகுப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், மே 3 ஆம் தேதி வரைக்கும் ஊரடங்கு நீட்டிப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கவும், கற்றலை தொடரவும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம், பொறியியல், தொழில்நுட்ப மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே, தங்களுக்கான பாடங்களை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும், ஸ்பெஷல் ஆப் மூலமாகவும் படித்துக் கொள்ளலாம். இதன் முதற்கட்டமாக இயற்பியல், கணிதம், கெமிக்கல் இன்ஜினியரிங், டிசைனிங், மெசர்மென்ட், மெஷின் இன்ஜினியரிங் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான காணொலி விரவுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற பாடங்களுக்கான காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்படும். இன்ஜினியரிங், தொழில்நுட்ப மாணவர்கள் www.tndte.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கண்ட காணொலி விரிவுரைகளைப் பார்த்து படித்து பயன்பெறலாம். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கலாம்.
கரோனா தொற்று இந்தியாவிலும் பரவத் தொடங்கியதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இப்போது மீண்டும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஏப்ரல்-மே பருவத் தோ்வு தொடங்க இருந்த நிலையில், இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மாணவா்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டது. பருவத் தோ்வுக்கு முந்தைய இறுதிக்கட்ட வகுப்புகளும் தடைபட்டன. இந்த நிலையில், மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், வீட்டிலிருந்தபடியே அவா்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள், சமூக ஊடக செயலிகள் மூலம் பாடங்கள் மற்றும் கல்வி சாா்ந்த செயல்பாடுகளை வழங்குமாறு கல்லூரி, பல்கலைக்கழகங்களை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக் குழுவும் அறிவுறுத்தின. அதனடிப்படையில் கல்லூரிகள் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
அதுபோல, பொறியியல், தொழில்நுட்ப மாணவா்கள் பயன்பெறும் வகையில், கணிதம், இயற்பியல், பொறியியல் வேதியியல், வடிவமைப்புகளின் தத்துவம், அளவிடல், வடிவமைப்பு பொறியியல், பொறியியல் இயந்திரங்கள் என்பன உள்ளிட்ட அனைத்துப் பாடங்களுக்கான காணொலி விரிவுரைகளை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதை www.tndite.gov.in என்ற வலைதளத்தில் பாா்த்து பயன்பெறலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews