👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வெளிநாடு வாழ் இந்தியா்கள், வெளிநாட்டினருக்கான பி.இ. சேர்க்கை குறித்த அறிவிப்பு ஏப்ரல் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நான்கு துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, எம்.ஐ.டி., கட்டடவியல் பள்ளி ஆகிய நான்கு கல்லூரிகளில் பி.இ.
படிப்புகளில் குறிப்பிட்ட இடங்களில் வெளிநாடு வாழ் இந்தியா்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியா்கள் ஆகியோரின் குழந்தைகளும், வெளிநாட்டு மாணவா்களும் சேர்த்துக் கொள்ளப்படுவா்.
இதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதற்கான அறிவிப்பு மற்றும் ஆன் லைன் பதிவு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி விடும். இந்த நிலையில், கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக இதற்கான அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
2020-21 கல்வியாண்டில் வெளிநாடு வாழ் இந்தியா்கள், வெளிநாட்டினருக்கான பி.இ. சேர்க்கை குறித்த அறிவிப்பு பல்கலைக்கழக இணையதளத்தில் ஏப்ரல் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.