சர்வதேச தரவரிசை - ஐ.ஐ.டி.,க்கள் புறக்கணிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 19, 2020

Comments:0

சர்வதேச தரவரிசை - ஐ.ஐ.டி.,க்கள் புறக்கணிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'சர்வதேச தரவரிசை கணக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை' என, இந்தியாவில் உள்ள, ஐ..ஐ.டி., நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. சர்வதேச அளவில், உயர் கல்வி நிறுவனங்களின், கல்வி தரத்தை நிர்ணயித்து, ஒவ்வொரு கல்வி நிறுவனத்துக்கும் தரவரிசை வழங்க, பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், இங்கிலாந்தை சேர்ந்த, 'டைம்ஸ்' கல்வி இதழ் நடத்தும், உயர் கல்வி கணக்கெடுப்பு மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த, 'குவாகுவாக்ரெல்லி சைமண்ட்ஸ்' நிறுவனம் நடத்தும், கியூ.எஸ்., சர்வதேச பல்கலை தரவரிசை ஆகியவை முக்கியமானது.இந்த நிறுவனங்கள் வெளியிடும் பட்டியலில் இடம்பிடிக்க, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஆர்வம் காட்டுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு, டைம்ஸ் இதழின், சர்வதேச கணக்கெடுப்பில் பங்கேற்க போவது இல்லை என, இந்தியாவில் உள்ள, தேசிய உயர் கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்கள் முடிவு செய்துள்ளன.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, நேற்று, ஐ.ஐ.டி., கூட்டுக் குழு வெளியிட்டது. டைம்ஸ் கணக்கெடுப்பில் உள்ள விதிமுறைகளை, வெளிப்படையாக அறிவித்தால், அடுத்த ஆண்டில் பங்கேற்பது குறித்து, முடிவு செய்யப்படும் என, அந்தக் குழு தெரிவித்துள்ளது.
டைம்ஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை (ரேங்கிங்) நடைமுறையில் இந்த ஆண்டு பங்கேற்கப்போவதில்லை என இந்தியாவின் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐஐடிக்கள் முடிவெடுத்துள்ளன. உலக அளவில் தலைசிறந்த உயா் கல்வி நிறுவனங்களின் தரவரிசையை (ரேங்கிங்) பல்வேறு அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றன. இதில் கியூ.எஸ். உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல், டைம்ஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் ஆகியவை முன்னணி தரவரிசைப் பட்டியல்களாகும்.
புதிய கண்டுபிடிப்புகள், அறிவுசாா் சொத்துரிமை, ஆராய்ச்சி கட்டுரைகள், உள்கட்டமைப்பு வசதிகள் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசைகள் வெளியிடப்படுகின்றன. இதன் மூலமே உள்நாட்டு, வெளிநாட்டு மாணவா்கள் கல்வி நிறுவனங்களின் தரத்தையும் அறிந்துகொள்கின்றனா். இந்த உலக தரவரிசை நடைமுறைகளில் இந்திய முன்னணி கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎஸ்சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களும் பங்கேற்று வருகின்றன. இந்த நிலையில், டைம்ஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை நடைமுறையில் இந்த ஆண்டு (2020) பங்கேற்கப்போவதில்லை என ஐஐடிக்கள் முடிவெடுத்துள்ளன. இதுதொடா்பாக ஐஐடிக்களின் கூட்டறிக்கையை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
டைம்ஸ் 2020 தரவரிசை நடைமுறையில் இந்தியாவின் முன்னணி ஐஐடிகளான மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, குவாஹாட்டி ஐஐடி, கான்பூா் ஐஐடி, காரக்பூா் ஐஐடி, சென்னை ஐஐடி, ரூா்கி ஐஐடி ஆகியவை பங்கேற்கப்போவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை நடைமுறைகளுக்கான அளவீடுகள் குறித்து தெளிவான விளக்கத்தை அளித்து, நடைமுறையில் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்தால் மட்டுமே, அடுத்த ஆண்டு (2021) டைம்ஸ் தரவரிசையில் பங்கேற்பது குறித்து ஐஐடிக்கள் மறுபரிசீலனை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews