கரோனா: இந்தியாவில் 4 மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 11, 2020

Comments:0

கரோனா: இந்தியாவில் 4 மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவில் தற்போது வரை 4 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. தற்போதுவரை 7529 பேர் கரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். அதே போல, 242 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் கரோனாவின் தாக்கம் குறையாததால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், ஒடிசா மற்றும் பஞ்சாபில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஒடிசாவில் ஏப்ரல் 30ம் தேதி வரையும், பஞ்சாபில் மே 1ம் தேதி வரையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்தனர். இந்நிலையில், தற்போது மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து அந்தந்த மாநில முதல்வர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews