கொரோனா விடுமுறை: அம்பானி பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 27, 2020

Comments:0

கொரோனா விடுமுறை: அம்பானி பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா விடுமுறையில் மாணவர்களின் கற்றல் திறன் தொடரும் வகையில், துருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் ஆன்லைன் வழியாக விர்ச்சுவல் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதற்கு ஒவ்வொரு மாநிலங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் துருபாய் அம்பானி பள்ளியில் ஆன்லைன் மூலம் விரச்சுவல் வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அம்பானியின் மனைவி நிதா அம்பானி, இந்த பள்ளிக்கு தலைவர் ஆவார். விர்ச்சுவல் வகுப்பு தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்களுக்கு வீடியோ மூலம் அவர் கூறியிருப்பதாவது,'கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்த இக்கட்டான நிலையில், நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அடுத்து வரும் சில வாரங்கள் கொரோனாவை எதிர்க்கும் இறுதி கட்ட போர் ஆகும். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாய் இருங்கள்.
மேலும், துருபாய் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து கற்றலை தொடரும் வகையில், மெய்நிகர் வகுப்புகளுக்கு (Virtual Platform) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடியே, தங்களுடைய பாடங்களை படிக்க முடியும். இந்த வகுப்புகள் விரைவில் ஆரம்பமாகும். துருபாய் பள்ளி ஆசிரியர்களும், உங்கள் நண்பர்களும், ஒட்டு மொத்த DAIS குடும்பமும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews