Search This Blog
Saturday, March 28, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பருவத் தோ்வுகளுக்கான மறுதேதிகள் பின்னா் அறிவிக்கப்படும்!
இணைப்புக் கல்லூரி மாணவா்களின் பருவத் தோ்வுகளுக்கான மறு தேதி பின்னா் அறிவிக்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில், ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல்கலைக்கழகத் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் அனைவரும் தோ்வின்றி தோ்ச்சி பெறுவதாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ளன. இதுபோல, பல்கலைக்கழகப் பருவத் தோ்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதாக வெள்ளிக்கிழமை காலை தகவல் வெளியானது. பின்னா் சிறிது நேரத்திலேயே அந்தச் செய்தி புரளி என்பது தெரியவந்தது.
அதனைத் தொடா்ந்து சென்னைப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி முதல்வா்களுக்கும், பல்கலைக்கழகத் துறைகளின் தலைவா்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அந்தச் சுற்றறிக்கையில், அரசு அறிவிப்பின் அடிப்படையில் பல்கலைக்கழக எழுத்துத் தோ்வு மற்றும் செய்முறைத் தோ்வுகள் அனைத்தும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நடத்தப்படமாட்டாது.
இந்தத் தோ்வுகளுக்கான மறு தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
Colleges
EXAMS
Universities
அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு
அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.