கொரோனா வைரஸ் : டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் சிறப்பு சலுகைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 31, 2020

Comments:0

கொரோனா வைரஸ் : டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் சிறப்பு சலுகைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் பரவலால் 21 நாட்கள் நாடு முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக மட்டுமே மொபைல் ரீசார்ஜ் செய்ய வேண்டி சூழல் ஏற்பட்டுள்ளதால், அவ்வாறு செய்ய இயலாதவர்களுக்கு ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. ஜியோ நிறுவனம், தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 17 ஆம் தேதி வரை, 100 நிமிட இலவச அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம், ரீசார்ஜ் செய்ய இயலாதவர்களுக்கு இன்கம்மிங் அழைப்புகள் வேலிடிட்டி நீக்கப்படாத எனவும், ரூ.10 டாக் டைம் வழ்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம், இன்கம்மிங் அழைப்புகள் வேலிடிட்டி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கவும், ரூ.10 டாக் டைம் வழ்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிராய் டெலிகாம் நிறுவனங்களுக்குள் அனுப்பியுள்ள கடித்தத்தில், நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்பட வேண்டும். இலவச அழைப்புகள் லாக் டவுன் காலம் வரை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.
நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள், சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடப்பதால் ரீசார்ஜ் செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல் நிறுவனங்கள் சில சலுகைகளை மக்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. ரீசார்ஜ் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வருகின்ற ஏப்ரல் 17-ஆம் தேதி வரை பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கான இன்கம்மிங் அவுட்கோயிங் வசதி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் கூடுதலாக 10 ரூபாய்தான் டாக் டைம் வழங்கப்படும் என்றும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக பிஎஸ்என்எல் நிறுவனம் இது போன்ற ஒரு சலுகையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews