கொரோனா பீதி - தமிழக அரசின் வாதத்தை ஏற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ஐகோர்ட் மறுப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 12, 2020

Comments:0

கொரோனா பீதி - தமிழக அரசின் வாதத்தை ஏற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ஐகோர்ட் மறுப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. எந்த பள்ளியிலும், மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்றும் வாதத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் ஒருவர் என்பது அடங்கும். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விதமாக டெல்லி, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு இம்மாதம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே கொரோனா தாக்குதலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை மத்திய - மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி மனு
இந்நிலையில் அரசுகள் அறிவித்த மருத்துவ அறிவுறுத்தல்களை பள்ளி செல்லும் குழந்தைகளால் பின்பற்ற முடியாது என்பதால், தமிழகத்தில் உள்ள நர்சரி முதல் உயர்நிலை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி உத்தரவிடக் கோரி, சென்னை மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், குழந்தைகளையும் வயதானவர்களையும் இந்த நோய் எளிதில் தாக்குகிறது என்பதால், குழந்தைகளின் பாதுகாக்க தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், 2019 - 20 ம் கல்வியாண்டு முடிவடையும் நிலையில் உள்ளதால், விடுமுறை அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், எந்த பள்ளியிலும், மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட மறுத்து விட்டனர்.அதேசமயம், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தொடரும்படி தமிழக அரசுக்கு அறிவிறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்
கொரோனா பீதியால் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொரோனாவால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் என சென்னையை சேர்ந்த ராஜவேலு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்றும், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன எனவும் தமிழக அரசு விளக்கமளித்து. இந்த விளக்கத்தை ஏற்ற நீதிமன்றம், ராஜவேலுவின் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா பரவாமல் எடுக்கப்படும் நடவடிக்கைகளை தொடர அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews