ஐகோர்ட்டில் வழக்கு...5,8 ம் வகுப்பு பொது தேர்வு நடத்துவதில் சிக்கல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يناير 31، 2020

Comments:0

ஐகோர்ட்டில் வழக்கு...5,8 ம் வகுப்பு பொது தேர்வு நடத்துவதில் சிக்கல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தடை விதிப்பது குறித்த வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்துமா? அல்லது பள்ளிக்கல்வித்துறை நடத்துமா? என உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், தற்போது தமிழக அரசு 5 மற்றும் 8ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். ஆனால் தற்போது 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்திற்கு இது முற்றிலும் எதிராக உள்ளது. கல்வி திட்டத்தை பொறுத்தவரையில் 8ம் வகுப்பு வரை மாணவர்களை தேர்ச்சி பெற செய்து அனைவரும் சமமாக கல்வி பெற வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும்.
ஆனால் இது அதற்கு எதிராக உள்ளது. மேலும் 5 மற்றும் 8வது படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களுக்கு அடுத்தகட்டமாக அரசு என்ன செய்யப்போகிறது என்பது குறித்த ஒரு தெளிவான அறிவிப்பு இல்லை. எந்த மாநிலத்திலும் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இந்த முறை அமலில் இல்லை. எனவே இம்முறை நடைபெறவுள்ள 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு வழக்கறிஞர் ஸ்ரீமதி வாதிடுகையில், மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியைத் தரமானதாக வழங்க வேண்டும் என்பதற்காகவே பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறவில்லை எனில் மறுதேர்வு நடத்தப்படும். இதனால் இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை என்றார். அந்த மனு தற்போது விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் சரமாரியான கேள்வி எழுப்பினார்கள்.
நீதிபதிகள் கேள்வி:
* இந்த தேர்வு எதன் அடிப்படையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது?
* அனைவருக்கும் கட்டாயக்கல்வி சட்டத்துக்கு 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு முரண்பாடாக உள்ளது.
* பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும்?
* 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்துமா? பள்ளிக்கல்வித்துறை நடத்துமா?
* 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே திருத்தப்படுமா? அல்லது வேறு பள்ளிகளுக்கு அனுப்பித் திருத்தப்படுமா?
* மறுதேர்தலில் தேர்ச்சி பெறாத குழந்தைகளின் நிலை என்ன?

* தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும்?
என்று தமிழக வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து தமிழக தொடக்க கல்வி துறை இயக்குநர் விரிவான பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 19ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுத்தேர்விலும் தேர்ச்சி பெறாவிட்டால் குழந்தைகளின் நிலை என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. *விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் திருத்துவதா வேறு பள்ளிகளில் திருத்துவதா என இன்னும் முடிவாகவில்லை. அரசு தரப்பு. *மறுதேர்வில் பெயிலானால் அக்குழந்தையின் நிலை என்ன? நீதிமன்றம் கேள்வி. வழக்கு பிப்.19 தேதிக்கு ஒத்திவைப்பு.
5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு; அரசு பதிலளிக்க உத்தரவு* *5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த தடை கேட்ட வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித் துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை* *விடைத்தாள்களை அந்தப் பள்ளியிலேயே திருத்துவதா? அல்லது வேறு பள்ளிகளிலா என்பது அரசின் பரிசீலனையில் உள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் பதில்* *தோல்வியுறும் மாணவர்கள் மறுத்தேர்விலும் தோல்வி அடைந்தால் அவர்களின் நிலை என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி*
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة