குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற இளம்பெண் டி.எஸ்.பி., ஆனார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 12, 2020

Comments:0

குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற இளம்பெண் டி.எஸ்.பி., ஆனார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற இளம் பெண் டி.எஸ்.பி., ஆனார்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவடிமதியூர் கிராமத்தைசேர்ந்தவர் ராஜேந்திரன். திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது மகள் ராஜ பிருந்தா 26, குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று சென்னையில் உள்ளாட்சி நிதி மற்றும் தணிக்கை துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார்.தற்போது குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று போலீஸ் டி.எஸ்.பி., ஆகி உள்ளார். இது குறித்து ராஜபிருந்தா கூறியதாவது:எனது மூதாதையர்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். திருவாடானை ராஜன் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளியிலும், பொறியியல் கல்லுாரியிலும் படித்தேன். குரூப் 1 தேர்வில் 85 வது ரேங்க் எடுத்து டி.எஸ்.பி., பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.மாணவிகள் தன்னம்பிக்கையுடன் விடா முயற்சியுடன் படித்தால் எந்த தேர்விலும் நிச்சயம் வெற்றி பெறலாம், என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews