70 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - CEO நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 04, 2020

Comments:0

70 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - CEO நடவடிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கடந்த கல்வி ஆண்டில் நடந்த மேல்நிலை வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் மதிப் பிடும் பணியில் , கவனக்குறைவாக செயல்பட்ட 70 முதுகலை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு , வேலூர் முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் நோட்டிஸ் அனுப்பி அதிரடித்துள்ளார் .
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது . மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பிடும் பணி என்பது , தேர்வுப்பணியை விட முக்கியத்துவம் வாய்ந்தது . 10ம் வகுப்பு விடைத்தாளை பட்டதாரி ஆசிரியர்களும் , மேல்நிலை வகுப்பு விடைத்தாள்களை முதுகலை ஆசிரியர்களும் மதிப்பீடு செய்கின்றனர். இந்த பணியின்போது , ஆசிரியர்கள் கவனக் குறைவாக செயல்படுவதால் , மதிப்பெண் விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பதாக அரசுத்தேர்வுகள் துறைக்கு புகார்கள் சென்றன .
கடந்த கல்வி ஆண்டில் நடந்த பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பிடும் பணியில் , மாணவர் களின் மதிப்பெண் விவரத்தில் மாறுதல் இருப்பது , மறுமதிப்பீடு செய்தபோது கண்டறியப்பட்டது . இதையடுத்து , சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் , கடந்த கல்வி ஆண்டில் மேல்நிலை வகுப்பு பொதுத் தேர்வின்போது கவனக்குறைவாக செயல்பட்டதாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 70 பேரிடம் விளக்கம்கேட்டு முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews