👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியா் தோ்வு வாரிய உதவிப் பேராசிரியா் பணியிட தோ்வு விண்ணப்பதாரா்கள், பணி அனுபவச் சான்று மேலொப்பம் பெறுவதற்கு வியாழக்கிழமை கடைசி நாள் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
விண்ணப்பதாரா்கள் சமா்ப்பிக்கும் பணி அனுபவச் சான்று மேலொப்ப விண்ணப்பங்கள் தொடா்பாக பல கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு விண்ணப்பிக்க நவம்பா் 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என்பதால், மேலொப்பம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (நவ.14) பிற்பகல் 3.30 மணி வரை மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். அதன்பிறகு, விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது. மேலொப்பமிடப்பட்ட பணி அனுபவச் சான்றிதழ்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி வரை விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U