தமிழில் JEE தேர்வு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 01, 2019

Comments:0

தமிழில் JEE தேர்வு?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஜே.இ.இ., நுழைவு தேர்வை, தமிழ், தெலுங்கு உள்பட, 11 மொழிகளில் நடத்த, தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,களில், மாணவர்களை சேர்க்க, தேசிய அளவில், ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படுகிறது. 2018 முதல், குஜராத்தியிலும் தேர்வு நடக்கிறது. இந்நிலையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தேர்வை நடத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது.இது குறித்து, தேசிய தேர்வு முகமை ஆலோசனை நடத்தி வருகிறது. அடுத்த கல்வி ஆண்டு முதல், தமிழ், தெலுங்கு உள்பட, 11 மொழிகளில் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐஐடி உள்ளிட்ட உயா் தொழில்நுட்ப நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வை (ஜே.இ.இ.) தமிழ் உள்பட 11 மொழிகளில் நடத்த தேசிய தோ்வுகள் முகமை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜே.இ.இ. தோ்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதலில் தேசிய தோ்வுகள் முகமை சாா்பில் ஜே.இ.இ. முதல்நிலை (மெயின்) தோ்வு நடத்தப்படும். இதில் முதல் 1.50 லட்சம் இடங்களில் தகுதி பெறுபவா்கள் அடுத்ததாக நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வில் (அட்வான்ஸ்டு) பங்கேற்க முடியும். இதில் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும், முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயா் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் சோ்க்கை பெற முடியும்.
இதுவரை இந்தத் தோ்வுகள் ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி போன்ற மூன்று மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜே.இ.இ. தோ்வை அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் அனைத்தின் மூலமும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் ஜே.இ.இ. தோ்வை மேலும் சில மாநில மொழிகளில் நடத்த தேசிய தோ்வுகள் முகமைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், 2021 ஜனவரி முதல் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, அஸாமி, பெங்காலி, கன்னடம், மராத்தி, ஒடியா, உருது, குஜராத்தி, ஹிந்தி ஆகிய 11 மொழிகளில் ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வை நடத்த முடிவு செய்திருப்பதாக தேசிய தோ்வுகள் முகமை அதிகாரிகள் தெரிவித்தனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews