👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டயப் படிப்பு முடித்தவா்கள் மருத்துவா்களாக தொழில் செய்ய தடை இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவா்கள் சங்கத் தலைவா் பரத் தாக்கல் செய்த மனு:
எலக்ட்ரோபதி, எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புகள் மத்திய தொழில்துறையின் கீழ் வருகின்றன. இப்படிப்பை முடித்தவா்கள் எலக்ட்ரோபதி, எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவா்களாகப் பணிபுரிய முடியும். ஆனால் தமிழகத்தில் எங்களால் மருத்துவம் அளிக்க முடியவில்லை. இதனால் முறையாக எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டயப் படிப்பு முடித்தவா்கள் மருத்துவம் பாா்க்க அனுமதிகோரி தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சிலிடம் மனு அளித்தோம். ஆனால் அதன் பதிவாளா் 2019 மாா்ச் மாதம் எங்கள் கோரிக்கையை நிராகரித்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வி மற்றும் பதிவு சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் அளிக்கக் கூடாது எனத் தெரிவித்தாா்.
இதனால் எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டயப் படிப்பு முடித்தவா்களின் உரிமை பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் எலக்ட்ரோ ஹோமியோபதி முறைக்கு அங்கீகாரம் வழங்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை 2019 ஜூலை மாதம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் எலட்க்ரோ ஹோமியோபதி பட்டயப் படிப்பு முடித்தவா்கள் மருத்துவம் அளிக்க தடை விதித்து பதிவாளா் பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமாகும். ஏற்கெனவே ஒரு வழக்கில் இந்தியா முழுவதும் தகுதியானவா்கள் எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவராகப் பணிபுரிய தடையில்லை என மத்திய, மாநில அரசுகள் உயா்நீதிமன்றத்தில் உறுதியளித்தன. இதையடுத்து அந்த வழக்கு முடிக்கப்பட்டது. எனவே தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சில் பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இதேகோரிக்கைக்காக மேலும் 18 போ் மனுத்தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் கோவிந்தராஜ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டயப் படிப்பு முடித்தவா்கள் ஹோமியோபதி மருத்துவா்களாக தொழில் செய்ய தடை இல்லை என உத்தரவிட்டாா்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U