👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மேற்கு வங்கத்தில், இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தில், அடுத்த கல்வியாண்டில் இருந்து, பாம்புகள் பற்றிய பாடத்தை சேர்க்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், வன உயிரினங்கள் குறித்து, பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து, பாடத்திட்ட கமிட்டி தலைவர் அபிக் மஜூம்தார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:மேற்கு வங்கத்தில், கிராமப்புறங்களில், பாம்புகள் கடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே போல, பாம்புகளை மக்களே அடித்து கொல்லும் சம்பவங்களும், அதிகம் நடக்கின்றன.வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை.எனவே, பாம்புகள் குறித்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அடுத்த கல்வியாண்டில் இருந்து, எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில், பாம்புகள் பற்றிய பாடங்கள் சேர்க்கப்படும்.இதில், பாம்புகளின் வகைகள், அதன் விஷத்தன்மை, பாம்பை கண்டால் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது, அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு விபரங்களும் கற்றுத் தரப்படும். டாக்டர்களின் உதவியுடன், இந்த பாடத்திட்டத்தின் முதல் வரைவு, தயாரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U