ஆசிரியை திட்டியதால் பள்ளியிலேயே தற்கொலைக்கு முயன்ற மாணவி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 12, 2019

Comments:0

ஆசிரியை திட்டியதால் பள்ளியிலேயே தற்கொலைக்கு முயன்ற மாணவி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருச்சி தனியார் பள்ளியில் ஆசிரியை திட்டியதால் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பொன்மலை செங்கற் உடையார் தெருவை சேர்ந்தவர் ராக்கி எமர்சன். இவரது மகள் ஏஞ்சலின் லெமோ (17) மேலப்புதூரில் உள்ள செயிண்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளியில் காலாண்டு தேர்வு முடிவுகள் குறித்த பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. ஏஞ்சலின் தனது தந்தையுடன் வந்திருந்தார். குறைந்த மதிப்பெண்கள் பெற்ற ஏஞ்சலினை, வகுப்பு ஆசிரியைகள் தந்தையிடம் திட்டியதாக தெரிகிறது. அழுதுக் கொண்டே இருந்த ஏஞ்சலின், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென, பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆசிரியை திட்டியதால், மனம் உடைந்த பிளஸ் - ஒன் மாணவி ஒருவர், தனது தந்தை கண் முன்னால், 2 - வது மாடியில் இருந்து கீழே குதித்து, தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம், திருச்சி - மேலப்புதூர் பகுதியில் நிகழ்ந்தது. காலாண்டு தேர்வு முடிவு குறித்து, பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தில் பங்கேற்ற மாணவியின் தந்தை ராக்கி எமர்சன், இந்த சம்பவத்தை கண்டு, அதிர்ச்சி அடைந்தார். தற்போது, ஆபத்தான நிலையில், மாணவி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews