பொறியியல் தொழில் பழகுனர் பயிற்சி பெறுவோரை குறைக்க முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 11, 2019

Comments:0

பொறியியல் தொழில் பழகுனர் பயிற்சி பெறுவோரை குறைக்க முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் தொழில் பழகுனர் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கையை, மூன்றில் ஒரு பங்காக குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.பொறியியல் உள்ளிட்ட சில பிரிவுகளில், பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமா முடிக்கும் மாணவர்கள், நேரடியாக பணியில் சேர முடியாது. இவர்கள், தொழிற்சாலைகளில் பழகுனர் பயிற்சி பெற வேண்டும். இந்த பயிற்சி முடித்தோர் தான், கல்வித்தகுதி அடிப்படையில், தொழிற்சாலைகளில் நிரந்தர பணியில் சேர்க்கப்படுவர். தொழில் பழகுனர் பயிற்சி மேற்கொள்வோருக்கு, அவர்களின் அடிப்படை செலவுகளுக்காக, உதவித்தொகை வழங்கப்படும்.அத்துடன் பயிற்சி தரும் தொழிற்சாலைகளுக்கு, மத்திய அரசு மானியமும் வழங்கும். மத்திய அரசின், இந்த தேசிய தொழில் பழகுனர் பயிற்சி திட்டத்தில், தமிழகத்தில் மட்டும், ஆண்டுக்கு, 72 ஆயிரம் பேர் வரை சேர்ந்து பயிற்சி பெறலாம். ஆனால், சராசரியாக, 62 ஆயிரம் மாணவர்கள் தான் சேர்ந்து பயன் பெறுகின்றனர்.
இந்நிலையில், தொழில் பழகுனர் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கையை குறைக்கும்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதனால், இந்த திட்டத்தின் தென்மண்டல அதிகாரிகள், அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: தொழில் பழகுனர் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை, மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட உள்ளது.இதுதொடர்பான இறுதி முடிவு, இம்மாத இறுதியில் நடக்க உள்ள, நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது. எனவே, தொழில் பழகுனர் பயிற்சி தரும் நிறுவனங்கள், இதுதொடர்பாக தங்களின் கருத்துக்களை, இ - மெயில் வாயிலாக தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews