மாணவர்களுக்கான உதவித்தொகை தரப்படாமல் கல்லூரிகளிடமிருந்து 1.19 கோடி திரும்ப வந்துள்ளது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 27, 2019

Comments:0

மாணவர்களுக்கான உதவித்தொகை தரப்படாமல் கல்லூரிகளிடமிருந்து 1.19 கோடி திரும்ப வந்துள்ளது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தராத கல்வி நிறுவனங்களிடமிருந்து 1 கோடியே 19 லட்சத்து 66 ஆயிரத்து 320 அரசுக்கு திரும்ப வந்துள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஆதிதிராவிட மாணவர்களுக்கான உதவித் தொகைகளை பல்வேறு துறை அதிகாரிகள் சுரண்டுவதாக கூறி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.், இப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கான உதவித்தொகையில் பெருமளவில் கையாடல் நடந்துள்ளது.இந்த முறைகேடு குறித்து அரசுக்கு பல முறை புகார் அளித்ததேன். இதையடுத்து, கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய தணிக்கை குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு அளித்த அறிக்கையில் 17 கோடியே 36 லட்சம் கையாடல் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நான் அளித்த புகார், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் என்.மாளவியா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக உரிய ஆவணங்களுடன் ஆதிதிராவிடர் நலத் துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஆதிதிராவிடர் நலத்துறை முதன்மை செயலாளர் டி.செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். பதில் மனுவில், கல்வி நிறுவனங்களில் , இந்த உதவித்தொகையை வாங்கிய பிறகு பல மாணவர்கள் படிப்பை தொடராமல் இடையில் நிறுத்திவிடுகிறார்கள். இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. இந்த தொகையை வசூலிக்குமாறு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் அந்த தொகையை அரசு தரும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்காத கல்வி நிறுவனங்கள் இதுவரை 1 கோடியே 19 லட்சத்து 66,320ஐ அரசிடம் திரும்பத் தந்துள்ளன என்று கூறியுள்ளார். இந்த வழக்கு மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews