நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 04, 2019

நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து, பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை தயாரித்தல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்வதை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நாடு முழுவதும் ஒரு முறை பயன்பாடு உள்ள பிளாஸ்டிக்கை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, இந்த பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சம் எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த உத்தரவை அமல்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து, பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சுற்றுசூழல் அபாயங்களை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பிளாஸ்டிக்கை தடை ெசய்ய அரசு முடிவு ெசய்துள்ளது. இதனை அனைத்து கல்வி நிறுவனங்கள் மூலம் தேசிய அளவிலான பிரசாரமாக முன்னெடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பிளாஸ்டிக் இல்லாத உயர்கல்வி நிறுவன வளாகங்களை உருவாக்கும் வகையில், கேன்டீன், விற்பனை அங்காடிகள், ஹோட்டல்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும், பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை, சுற்றுச்சூழலுக்கு தகுந்தவாறு மாற்று பொருட்களை உருவாக்க வேண்டும். கல்வி நிறுவனங்களுக்குள் மாணவர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர தடை விதிக்க வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாணவர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களும், மாணவர்களும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க, உரிய குடிநீர் வசதிகளை நிறுவ வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கவர்கள் மற்றும் பிற பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக துணிப் பைகள், காகிதப் பைகள் போன்றவற்றை பயன்படுத்த மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் உயர்கல்வி நிறுவனங்கள், கிராமங்களை தத்தெடுத்துள்ளன. அந்த கிராமங்களில், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பிளாஸ்டிக்கை தவிர்த்து, மாற்று பொருட்களை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம், உயர்கல்வி நிறுவனங்களுக்கு கீழ் உள்ள கிராமங்களை, பிளாஸ்டிக் இல்லாத கிராமங்களாக மாற்ற முடியும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்காத பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள் கொண்டு வருவதற்குத் தடை விதிக்க வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதால் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு அதற்கான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல் நாட்டிலுள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.
அதன்படி, பிளாஸ்டிக் இல்லா வளாகத்தை உருவாக்கும் வகையில், உணவகம், பிற கடைகள் என கல்வி நிறுவனத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பது, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருளாக மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மக்காத பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள் கொண்டு வருவதற்கும் தடை விதிப்பதோடு, பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளையும் மேற்கொள்ளவேண்டும். அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் ஏதாவது ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரங்கள் மூலம் பிளாஸ்டிக் இல்லா கிராமமாக மாற்றுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் என யுஜிசி வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews