நீண்ட துாரத்தில் தேர்வு மையம் பட்டதாரிகள் கடும் அதிருப்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 24, 2019

Comments:0

நீண்ட துாரத்தில் தேர்வு மையம் பட்டதாரிகள் கடும் அதிருப்தி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீண்ட துாரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளதால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தேர்வை எழுத உள்ள தேர்வர்கள், தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,144 முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பதவிகளை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, வரும், 27, 28 மற்றும் 29ம் தேதிகளில், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.மொத்தம், 1.85 லட்சம் முதுநிலை பட்டதாரிகள், தேர்வுக்கு விண்ணப்பித்து, ஹால் டிக்கெட் பெற்றுஉள்ளனர். மொத்தம், 154 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்வுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளதால், தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள, அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர். மேலும், ஆன்லைனில் பயிற்சி தேர்வை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில், ஹால் டிக்கெட் பெற்ற தேர்வர்களில் சிலருக்கு, நீண்ட துாரத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப் பட்டுள்ளதாக, குற்றம் சாட்டிஉள்ளனர். தேர்வர்களின் சொந்த ஊர்களில் இருந்து, 300 கி.மீ.,க்கும் மேல், தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. எனவே, தேர்வர்கள், பல கி.மீ., துாரம் பயணித்து, தேர்வை எழுத வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்த பிரச்னையை தவிர்க்க, அதிக துாரத்தில் தேர்வு மையம் அமைக்கப் பட்டவர்களுக்கு, தேர்வு மையத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews