விநாயகர் சதுர்த்தி., எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும்.?! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 17, 2023

விநாயகர் சதுர்த்தி., எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும்.?!

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.


பூஜை செய்ய உகந்த நேரம்


காலை : 06.00 முதல் 07.00 மணி வரை


பகல் : 12.00 முதல் 02.00 மணி வரை


மாலை : 06.00 முதல் 9.00 மணி வரை


விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானது விநாயகர் சதுர்த்தி விரதம். விக்ன விநாயகரை போற்றி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் பெறலாம்.


நாம் பல தெய்வங்களுக்கு பல்வேறு நறுமணம் வீசும் மாலைகளால் மாலை சூட்டி வழிபடுகின்றோம். ஆனால் விநாயகருக்கு அருகம்புல் மாலையே மிகவும் பிடித்தது.

விநாயகர் பூஜை செய்வதற்கு அன்னம், மோதகம், அவல், பழங்கள் இல்லாது போனாலும் அருகம்புல்லும், தண்ணீரும் இருந்தால் போதும் என்பார்கள்.

பூத கணங்களின் அதிபதியாக திகழ்பவர்தான் விநாயகர். முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்தவொரு செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கின்றோம்.

விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள்புரிவார். அதனால்தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

Total Pageviews