ஆயூஷ் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 26, 2019

Comments:0

ஆயூஷ் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (செப். 26) தொடங்குகிறது. முன்னதாக, அதற்கான தரவரிசைப் பட்டியலை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை வெளியிட்டது. அதில் மொத்தம் 1,978 பேருக்கு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.
அதேபோன்று, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், நாகர்கோவில், கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் என 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இதேபோல, 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளைப் போலவே, சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் இம்முறை நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதன்படி, பிஎஸ்எம்எஸ் (சித்தா), பிஏஎம்எஸ் (ஆயுர்வேதம்), பியூஎம்எஸ் (யுனானி), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் நடைபெற்றது. அதில், அரசு இடங்களுக்கு 1,600 பேரும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 700 பேரும் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் அவை பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 1,423 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 555 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நீட் தேர்வில் 449 மதிப்பெண் பெற்ற எஸ்.இந்துமதி முதலிடத்தையும், எஸ்.சண்முகசுந்தரி 449 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், எஸ்.ஷீபா 447 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களில் 9 மாணவிகளும், ஒரு மாணவரும் இடம்பெற்றுள்ளனர். நாளை கலந்தாய்வு: அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு வரும் 28, 29-ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளப் பக்கங்களை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews