நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 24, 2019

Comments:0

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடு செய்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி.க்கு மாற்றி டிஜிபி ஜே.கே.திரிபாதி திங்கள்கிழமை உத்தரவிட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு அண்மையில் மின்னஞ்சல் மூலமாகப் புகார் வந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் கல்லூரி பேராசிரியர்கள், உதித் சூர்யாவிடம் விசாரணை செய்தனர். இதில் உதித் சூர்யா, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உதித் சூர்யாவின் நீட் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது, அதில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்துக்கும், உதித் சூர்யாவுக்கும் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தேனி மாவட்ட காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் உதித் சூர்யா மீதும், அவருக்காக தேர்வு எழுதிய நபர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், உதித் சூர்யா ஏற்கெனவே இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததால், மூன்றாவது முறையும் தோல்வியடைந்துவிட்டால் மருத்துவம் படிக்க முடியாது என்பதால், உதித் சூர்யாவும், அவரது பெற்றோரும் இணைந்து ஏற்கெனவே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு நபரை ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்திருப்பதும், முறைகேட்டில் சிக்காமல் இருப்பதற்கு மும்பையில் தேர்வு எழுதியிருப்பதும் தெரியவந்தது. சிபிசிஐடி.க்கு மாற்றம்: இதைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல்துறையின் தனிப்படையினர் கடந்த வாரம் சென்னையில் உதித் சூர்யா குறித்தும், அவரது பெற்றோர் குறித்தும் விசாரணை செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் உதித் சூர்யாவையும், அவரது பெற்றோரையும் தேடி வந்தனர். இந்நிலையில் இவ் வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சிபிசிஐடி.க்கு மாற்றி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இவ் வழக்குக்குரிய ஆவணங்களைத் தேனி மாவட்ட போலீஸார் உடனடியாக சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார், இவ் வழக்கு குறித்து விரைந்து விசாரணையைத் தொடங்க உள்ளனர். சென்னை: தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உதித்சூர்யா(20). "நீட்' தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதி, தேனி அரசு அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு படிப்பில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து க.விலக்கு காவல் நிலையத்தில் மருத்துவக் கல்லூரி முதன்மையர் ராஜேந்திரன் புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, ஆண்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் உஷா தலைமையில் தனிப் படை அமைத்து தலைமறைவாக உள்ள மாணவர் உதித்சூர்யாவை தேடி வருகின்றனர். சென்னையில், உதித் சூர்யாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தனிப்படை காவல் சார்பு ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா தலைமையில் ஒரு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் ராஜேந்திரனிடம் சனிக்கிழமை காவல் ஆய்வாளர் உஷா விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், ஆள்மாறாட்ட புகார் குறித்து ஏற்கெனவே உதித்சூர்யாவிடம் தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்திய மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் எழிலரசன், பேராசிரியர்கள் ஜெயந்தி, ரெத்திகா, விஜயலட்சுமி ஆகியோரிடம் தனிப்படை காவல் ஆய்வாளர் உஷா, சார்பு ஆய்வாளர் அசோக் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி அலுவலர்கள், கல்லூரி மற்றும் விடுதி மாணவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக தனிப்படை போலீஸார் கூறினர். மும்பை செல்கிறது தனிப்படை: மாணவர் உதித்சூர்யா ஏற்கெனவே கடந்த 2017 மற்றும் 2018ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தேர்வு மையத்தில் "நீட்' தேர்வு எழுதியதாகவும், இந்த ஆண்டு அவர் மும்பையில் உள்ள தனியார் "நீட்' தேர்வு பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து படித்ததும் தனிப்படை போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் உதித்சூர்யா பெயரில் ஆள்மாறாட்டம் செய்து "நீட்' தேர்வு எழுதியிருப்பது தெரிய வந்துள்ளதால், விரைவில் மும்பை சென்று விசாரணை நடத்த உள்ளதாக தனிப்படை போலீஸார் கூறினர். இந்த நிலையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews