Search This Blog
Sunday, September 22, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போது, பணியில் இருந்த நிர்வாக குழுவினரிடம் இன்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மருத்துவ கல்லூரியில் ஆள் மாறாட்டம் செய்து சேர்ந்ததுபோல, திருச்சி, நெல்லை அரசு மருத்துவ கல்லூரியிலும் மாணவர்கள் சேர்ந்து உள்ளார்களா என சான்றிதழ்களும், ஹால்டிக்கெட் புகைப்படங்களும் ஆய்வு செய்யப்பட்டன.நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் மாணவன் உதித்சூர்யா சேர்ந்த விவகாரத்தை தொடர்ந்து, இவரை போன்று வேறு யாராவது ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்துள்ளனரா என்பதை அறிய தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் விசாரணை நடந்து வருகிறது. திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு 150 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இதில், மாணவர்களின் கல்வி ஆவணங்கள், புகைப்படம், பிற சான்றிதழ்கள் அனைத்தும் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.
அத்துடன் நீட் தேர்வு எழுதியபோது பயன்படுத்திய ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படமும், சம்பந்தப்பட்ட மாணவரின் புகைப்படமும் ஒன்றுபோல உள்ளதா, வித்தியாசமாக இருக்கிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. டீன் (பொ) அர்ஷியா பேகம் தலைமையில் அனைத்து துறைத்தலைவர்களும் மாலை வரை ஆய்வு பணியில் ஈடுபட்டனர். நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த 250 மாணவர்களின் சான்றுகளும் சரிபார்க்கும் பணி நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் நடந்தது. முதல்வர் கண்ணன் உத்தரவின்பேரில் துணை முதல்வர் சாந்தாராம் தலைமையில் பேராசிரியர்கள் 4 பேர் கொண்ட குழுவினர் மாணவர்களை அழைத்து அவர்களது ஆவணங்களை சரிபார்த்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : இன்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்த முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.